செய்திகள்
முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் தியாகம் வீண்போகாது - முதல் மந்திரி கெஜ்ரிவால்

Published On 2021-04-04 23:54 GMT   |   Update On 2021-04-04 23:54 GMT
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 120க்கும் மேற்பட்ட நாட்களை கடந்து போராடி வருகின்றனர்.
புதுடெல்லி:

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அரியானா மாநிலத்தின் ஜிந்தில் உள்ள கிஷன் மகாபஞ்சாயத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் தராமல் ஆளுநருக்கு தந்துள்ளனர். விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்ததால் எங்களை தண்டிக்க ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆளுநருக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் மசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.



போராட்டத்தின் போது  இறந்த விவசாயிகள் 300 பேரின் தியாகங்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் தியாகம் வீண்போகாது என தெரிவித்தார்.
Tags:    

Similar News