செய்திகள்
காஷ்மீரில் பா.ஜனதா தலைவர் வீடு மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- போலீஸ்காரர் பலி
காஷ்மீரில் பாரதிய ஜனதா தலைவர் வீடு மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் அன்வர் அகமது. இவர் குப்வாரா மாவட்ட பொறுப்பாளாராகவும் இருக்கிறார். நவ்காம் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அன்வர் அகமது வீடு மீது இன்று காலை பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினார்கள். இதில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ரமீஷ்ராஜா குண்டுவெடிப்பில் காயம் அடைந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் அன்வர் அகமது. இவர் குப்வாரா மாவட்ட பொறுப்பாளாராகவும் இருக்கிறார். நவ்காம் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அன்வர் அகமது வீடு மீது இன்று காலை பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினார்கள். இதில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ரமீஷ்ராஜா குண்டுவெடிப்பில் காயம் அடைந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.