செய்திகள்
மம்தா பானர்ஜி

மத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்

Published On 2021-03-07 11:30 GMT   |   Update On 2021-03-07 11:30 GMT
பாஜக வாக்குகளை வாங்க விரும்பினால், மக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார்.
சிலிகுரி:

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதைக் கண்டித்து, மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மம்தா பானர்ஜி தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் பேரணியாக சென்றனர்.

பேரணியின் முடிவில் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்களை தவறாக வழிநடத்த பிரதமர் மோடி பொய்களைக் கூறுகிறார். நாங்கள் தேர்தல் விளையாட்டை விளையாட தயாராக இருக்கிறோம். அவர்கள் (பாஜக) வாக்குகளை வாங்க விரும்பினால், மக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களியுங்கள்.

மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலுக்கு பின் மத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல. மேற்கு வங்காளத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்று கூறும் பிரதமர், அதற்கு முன், பீகார், உத்தர பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் என்ன நிலை என்று பார்க்க வேண்டும். மேற்கு வங்காளத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News