செய்திகள்
மம்தா பானர்ஜி

சிலிகுரியில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் மம்தா பானர்ஜி

Published On 2021-03-06 13:09 GMT   |   Update On 2021-03-06 13:09 GMT
மம்தா பானர்ஜியுடன் வங்காள நடிகைகளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களுமான மிமி சக்கரவர்த்தி மற்றும் நுஸ்ரத் ஜஹான் ஆகியோர் உடன் வந்தனர்.
சிலிகுரி:

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சிலிகுரி வந்தார். அவருடன் வங்காள நடிகைகளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களுமான மிமி சக்கரவர்த்தி மற்றும் நுஸ்ரத் ஜஹான் ஆகியோர் உடன் வந்தனர். சிலிகுரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஓம் பிரகாஷ் மிஸ்ராவும் வந்திருந்தார். 

சிலிகுரி விமான நிலையத்தில் மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, சமையல் எரிவாவு விலை உயர்வைக் கண்டித்து சிலிகுரியில் நாளை ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப் போவதாக தெரிவித்தார். சிலிண்டர்களை சுமந்து, மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
Tags:    

Similar News