செய்திகள்
பீகாரில் பிரசாந்த் கிஷோரின் வீடு இடிப்பு
பீகாரில் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணி தொர்பாக பிரபல அரசியல் மற்றும் தேர்தல் வல்லுனரான பிரசாந்த் கிஷோரின் வீட்டின் ஒரு பகுதி நேற்று இடிக்கப்பட்டது.
பக்சார்:
பிரபல அரசியல் மற்றும் தேர்தல் வல்லுனரான பிரசாந்த் கிஷோரின் வீடு பீகாரின் பக்சாரில் உள்ளது. அவரது தந்தை ஸ்ரீகாந்த் பாண்டே கட்டிய இந்த வீடு சமீப காலமாக காலியாக உள்ளது. இந்த வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்காக பிரசாந்த் கிஷோரின் வீட்டின் ஒரு பகுதி நேற்று இடிக்கப்பட்டது. குறிப்பாக காம்பவுண்டு சுவரின் ஒரு பகுதி மற்றும் கேட் உள்ளிட்ட பாகங்கள், நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் வருவதால் அவை அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான இழப்பீடு ஏற்கனவே அங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்டதாகவும், இதனால் பலர் தங்கள் கட்டிடங்களை அகற்றி தந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பிரபல அரசியல் மற்றும் தேர்தல் வல்லுனரான பிரசாந்த் கிஷோரின் வீடு பீகாரின் பக்சாரில் உள்ளது. அவரது தந்தை ஸ்ரீகாந்த் பாண்டே கட்டிய இந்த வீடு சமீப காலமாக காலியாக உள்ளது. இந்த வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்காக பிரசாந்த் கிஷோரின் வீட்டின் ஒரு பகுதி நேற்று இடிக்கப்பட்டது. குறிப்பாக காம்பவுண்டு சுவரின் ஒரு பகுதி மற்றும் கேட் உள்ளிட்ட பாகங்கள், நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் வருவதால் அவை அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான இழப்பீடு ஏற்கனவே அங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்டதாகவும், இதனால் பலர் தங்கள் கட்டிடங்களை அகற்றி தந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.