செய்திகள்
மகாராஷ்டிரா மாநில கவர்னர்

கவர்னருக்கு விமானம் வழங்க மறுத்த மகாராஷ்டிரா அரசு

Published On 2021-02-11 11:21 GMT   |   Update On 2021-02-11 11:21 GMT
மகாராஷ்டிர மாநில கவர்னர் இன்று டேராடூன் செல்ல இருந்த நிலையில், அம்மாநில அரசு அனுமதி கொடுக்காததால் கமர்சியல் விமானத்தில் சென்றார்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் செல்ல மகாராஷ்டிரா மாநில கவர்னர் பகத் சிங் கேசரி முடிவு செய்தார். மகாராஷ்டிர மாநில விமானத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். அவர் புறப்பட இருந்த நிலையில், திடீரென மகாராஷ்டிரா மாநில அரசு அனுமதி மறுத்தது.

இதனால் கவர்னர் விமான நிலையில் சென்று கமர்சியல் விமானத்தில் பயணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி விமானம் டிக்கெட் பதிவு செய்து டேராடூன் சென்றார்.

கவர்னருக்கு அரசு விமானத்தை வழங்காத மகாராஷ்டிர மாநில அரசுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இகுறித்து முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ‘‘இது சிறுபிள்ளைத்தனமான செயல். இது மிகவும் திமிர்பிடித்த அரசு, ஆளுநர் பதவியில் யார் என்பதை விட அந்த பதவி முக்கியமானது. அவரை அவமதிக்க வேண்டுமென்றே அரசு அனுமதி வழங்கவில்லை’’ என்றார்
Tags:    

Similar News