செய்திகள்
மம்தா பானர்ஜி

திரும்ப வருவேன் - கடைசி கூட்டத்தில் மம்தா சூளுரை

Published On 2021-02-08 23:36 GMT   |   Update On 2021-02-08 23:36 GMT
சட்டசபை தளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நின்றபடி, வெற்றிக்கு அடையாளமாக விரல்களைக் காட்டி, ‘‘நான் திரும்ப வருவேன்’’ என்று சூளுரைத்தார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள சட்டசபையின் பட்ஜெட் கூட்டமும், இந்த சட்டசபை காலமும் நேற்று முடிவடைந்தன.

அதன் முடிவில் சட்டசபை தளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நின்றபடி, வெற்றிக்கு அடையாளமாக விரல்களைக் காட்டி, ‘‘நான் திரும்ப வருவேன்’’ என்று சூளுரைத்தார். சட்டசபையின் கடைசி நாளன்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வழக்கமான நிகழ்வும் நடைபெற்றது.

அதை இடதுசாரி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மட்டும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Tags:    

Similar News