செய்திகள்
கோப்புப்படம்

மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 2,630 பேருக்கு கொரோனா: 42 பேர் பலி

Published On 2021-01-30 17:40 GMT   |   Update On 2021-01-30 17:40 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 2,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 2,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,23,814 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 1,535 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 19,27,335 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று 42 பேர் உயிரிழக்க, பலியானோரின் எண்ணிக்கை 51,042 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 44,199 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தத் தகவலை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது
Tags:    

Similar News