செய்திகள்
பிரியங்கா காந்தி

விவசாயிகளுக்கு எதிராக இப்படி பேசுவது மிகப்பெரிய பாவம் -பிரியங்கா காந்தி

Published On 2020-12-28 09:40 GMT   |   Update On 2020-12-28 09:40 GMT
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் சுமார் 40 விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுடன் இதுவரை மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. நாளை அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

இந்நிலையில், போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு காது கொடுத்து கேட்பதுடன், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார். 

விவசாயிகளின் போராட்டம் அரசியல் சதி என்று கூறுவது முற்றிலும் தவறானது. விவசாயிகளுக்கு எதிராக இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது மிகப்பெரிய பாவம். விவசாயிகளுக்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும். அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளை ஏற்று சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்’ என பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.
Tags:    

Similar News