செய்திகள்
சத்தீஷ்காரில் கரடி தாக்கி 4 பேர் பலி
சத்தீஷ்கார் மாநிலம் தேவ்கார் வனப்பகுதியில் கரடி தாக்கியதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்
ராய்ப்பூர்:
சத்தீஷ்கார் மாநிலம் கோரியா மாவட்டம் தேவ்கார் வனப்பகுதியை ஒட்டிய அன்க்வானி கிராமத்தில் கரடிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் பொதுமக்கள் சிலர் நேற்று முன்தினம் காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த கரடி ஒன்று 2 பெண்கள் உள்பட 4 பேரை தாக்கி கொன்றது. மேலும் ஒருவர் கரடிக்கு பயந்து மரத்தின் மேல் ஏறி தப்பினார்.
இறந்த 4 பேரின் உடல் அருகே அந்த கரடி விடியவிடிய உட்கார்ந்து இருந்தது. இதனால் மீட்புப்பணி பாதிக்கப்பட்டது. அதிகாலையில் கரடி அங்கிருந்து காட்டுக்குள் சென்று விட்டது. உடனே பொக்லைன் எந்திரம் மூலமாக மரத்தில் ஏறி தப்பியவரை காப்பாற்றினர். கரடி தாக்கியதில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சத்தீஷ்கார் மாநிலம் கோரியா மாவட்டம் தேவ்கார் வனப்பகுதியை ஒட்டிய அன்க்வானி கிராமத்தில் கரடிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் பொதுமக்கள் சிலர் நேற்று முன்தினம் காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த கரடி ஒன்று 2 பெண்கள் உள்பட 4 பேரை தாக்கி கொன்றது. மேலும் ஒருவர் கரடிக்கு பயந்து மரத்தின் மேல் ஏறி தப்பினார்.
இறந்த 4 பேரின் உடல் அருகே அந்த கரடி விடியவிடிய உட்கார்ந்து இருந்தது. இதனால் மீட்புப்பணி பாதிக்கப்பட்டது. அதிகாலையில் கரடி அங்கிருந்து காட்டுக்குள் சென்று விட்டது. உடனே பொக்லைன் எந்திரம் மூலமாக மரத்தில் ஏறி தப்பியவரை காப்பாற்றினர். கரடி தாக்கியதில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.