செய்திகள்
நீதிமன்றம்

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை- சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

Published On 2020-12-04 13:24 GMT   |   Update On 2020-12-04 13:24 GMT
சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
மும்பை:

மும்பையை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு கடந்த 2017-ம் ஆண்டு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை நடத்தினர். இதில் சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். இதில் 27 வயது உடைய வாலிபர் ஒருவர் தன்னை கற்பழித்ததாக தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர் சம்பவம் குறித்து காட்கோபர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து சிறப்பு நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணையில் வாலிபர் மீதான குற்றம் நிரூபணமானது.

இதற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் குற்றம் சுமத்தப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News