செய்திகள்
கோப்புபடம்

ஆந்திராவில் இன்று 1,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2020-11-19 14:52 GMT   |   Update On 2020-11-19 14:52 GMT
ஆந்திர மாநிலத்தில் இன்று 1,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஐதராபாத்:

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று 1,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,58,711 ஆக அதிகரித்துள்ளது.

அந்திர மாநிலத்தில் இன்று 11 பேர் கொரொனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,911 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திராவில் இதுவரை 8,35,801 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 16,000 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News