செய்திகள்
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

வங்காளதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் - மத்திய அரசு தலையிட காங்கிரஸ் கோரிக்கை

Published On 2020-11-03 00:21 GMT   |   Update On 2020-11-03 00:21 GMT
வங்காளதேசத்தில் இந்து குடும்பங்களை குறிவைத்து அடிப்படைவாதிகள் வன்முறையிலும், கொள்ளையிலும் ஈடுபடுகிறார்கள்.
புதுடெல்லி:

வங்காளதேசத்தில், பேஸ்புக் பக்கத்தில் ஒருவர் இஸ்லாம் மதத்தை அவமதிப்பு செய்ததாகக் கூறி, அதற்கு பழிக்குப் பழியாக சிறுபான்மை இந்துக்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் 15 கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட இந்துக்கள் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வங்காளதேசத்தில் இந்து குடும்பங்களைக் குறிவைத்து அடிப்படைவாதிகள் வன்முறையிலும், கொள்ளையிலும் ஈடுபடுகிறார்கள். ஆகவே, மேற்கொண்டு வன்முறை அதிகரிப்பதை தடுக்க இப்பிரச்சினையை வங்காளதேச அரசிடம் மத்திய அரசு எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News