செய்திகள்
தசரா விழாவில் பங்கேற்று உறுதிமொழி ஏற்ற தலைவர்கள்

ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் தசரா விழா -50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி

Published On 2020-10-25 03:12 GMT   |   Update On 2020-10-25 03:12 GMT
ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி நடத்தப்பட்ட தசரா விழாவில் 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
நாக்பூர்:

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் இன்று தசரா விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் எதிர்கால திட்டங்கள் குறித்து மோகன் பகவத் உரையாற்ற உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடைபெறும் தசரா விழாவில் ஏராளமானோர் பங்கேற்பார்கள். ஆனால் இந்த ஆணடு கொரோனா பரவல் காரணமாக, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விழா நடத்தப்பட்டது. 50 நபர்களுக்கு மட்டுமே சமூக இடைவெளியுடன் விழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. 

சிறப்பு விருந்தினர் யாரும் அழைக்கப்படவில்லை. விழா நிகழ்ச்சிகள் சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. 
Tags:    

Similar News