செய்திகள்
துர்கா பூஜை

திரிபுராவில் வழிகாட்டுதலுடன் துர்கா பூஜை கொண்டாட அரசு அனுமதி

Published On 2020-10-12 22:46 GMT   |   Update On 2020-10-12 22:46 GMT
திரிபுராவில் திருத்தப்பட்ட வழிகாட்டுதலுடன் துர்கா பூஜை கொண்டாட அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.
அகர்தலா:

கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் நிலையில், நவராத்திரி கொண்டாட்டம் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. 26-ம் தேதி தசரா, அடுத்த மாதம் 14-ம் தேதி தீபாவளி, டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் என தொடர்ந்து பண்டிகைகள் வரிசை கட்டி நிற்கின்றன.

பண்டிகைகள் வந்தாலும், கொரோனா காலத்துக்கு ஏற்ப, உஷாராக இருக்க வேண்டுமே தவிர, கோலாகல கொண்டாட்டத்தில் தீவிரமாக இறங்கி விடக்கூடாது என்று வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர்.

நவராத்திரி பண்டிகை காலம் நெருங்குவதால். அதன் முக்கிய விழாவான துர்கா பூஜை மேற்கு வங்கம், உ.பி., மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

தற்போது கொரோனாவின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாநிலங்களும் முக்கிய விழாக்கள் / பண்டிகைக்கான வழிகாட்டுதல்களை கூறுகிறது. அதனை பின்பற்ற வேண்டும் எனவும் தொடர்ந்து அறிவுறுத்துகிறது.

இந்நிலையில், திரிபுராவில் துர்கா பூஜையை பாதுகாப்பாகவும், எளிமையாகவும் கொண்டாட வேண்டும் என்று மாநில அரசு முக்கியமான வழிகாட்டுதல்களை முன்னதாக செப்.,4 அன்று வெளியிட்டது. தொற்று தீவிரம் அடைவதால், தற்போது சில திருத்தங்களையும் அரசு கொண்டு வந்ததாகவும் கூறுகிறது.

அதன்படி, துர்கா பூஜையை கொண்டாடும் அமைப்பாளர்கள் சந்தாவை ஆன்லைனில் சேகரிக்க வேண்டும். 
பாதுகாப்பு விதிமுறையின்படி, விழாவுக்கான பந்தல்களை குறைக்க வேண்டும்.

பந்தல்களில் குறுகிய நுழைவு மற்றும் வெளியேறும் அமைப்புகளை தவிர்க்க வேண்டும்.

ஒரே நேரத்தில் 5 முதல் 10 பேர் சுவாமி சிலையை அனுமதிக்கப்படுகிறது.

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் படி, அனைத்து பூசாரிகள், பூஜை அமைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் அக்.,21-ம் தேதி வரும் பஞ்சமிக்கு முன் கொரோனா சோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

பூஜை நடக்கும் இடத்திற்கு அருகே கொரோனா சோதனை குழுக்கள் இருக்கலாம். துர்கா பூஜை பண்டிகையின் போது சுவாமியை தரிசிக்க வரும் / பார்வையிடும் பக்தர்களுக்கு சோதனைகள் நடத்தப்படலாம்.

விழா நடக்கும் இடங்கள் காற்றோட்ட வசதியுடனும், கூட்டம் அதிகமாக இல்லாத வகையிலும் இருக்க வேண்டும்.

10 முதல் 15 பேர் ஒரே நேரத்தில் புஷ்பாஞ்சலியில் பங்கேற்கலாம். பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்து பூக்களை கொண்டு வரலாம்.

பூஜை பந்தல்களுக்கு முன்னால் எந்தவிதமான கண்காட்சிகளையும் அரசாங்கம் தடைசெய்தது, கூட்டங்களைத் தவிர்ப்பதற்காக பூஜா பந்தலிலிருந்து சிறிது தூரத்தில் சில ஸ்டால்களை அமைக்கலாம்.

தசரா அன்று பூஜைக்கான விழா அமைப்புகள் சிண்டூர் கெலா என்ற பாரம்பரிய சடங்கை ஏற்பாடு செய்யும். இந்த சடங்கு துர்கா தேவிக்கு செய்யப்படும் வழிபாடு முறைகளில் ஒன்றாகும். எந்த ஊர்வலமும் இல்லாமல் சுவாமி சிலைகளை பந்தல்களுக்கு கொண்டு வரும் படி பூஜை அமைப்பாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் துர்கா தேவியை தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் கைகைளை சுத்தமாக வைத்துக் கொள்வது உள்ளிட்ட சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

பந்தல் குழுக்களில், கூட்டத்தை கண்காணிக்க சிசிடிவி அமைக்க வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் பொது துர்கா பூஜை கொண்டாட்டம் இருக்காது என்றாலும், மண்டலங்களுக்குள் வசிக்கும் மக்கள் அந்தந்த வீடுகளில் கொண்டாடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News