செய்திகள்
தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் (கோப்பு படம்)

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை- 3 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது பாதுகாப்பு படை

Published On 2020-10-07 07:40 GMT   |   Update On 2020-10-07 07:40 GMT
ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் சுகன் ஜைனபோரா பகுதியில் ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று காலை அப்பகுதியை போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

நீண்ட நேரம் நீடித்த இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது.

Tags:    

Similar News