செய்திகள்
ஏ.கே.47 துப்பாக்கி

எல்லையில் ட்ரோன் மூலம் பயங்கரவாதிகளுக்காக ஆயுதங்களை வீசிய பாகிஸ்தான்

Published On 2020-09-22 13:03 GMT   |   Update On 2020-09-22 13:03 GMT
பாகிஸ்தான் விமானம் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வீசிச் சென்றதாக ஜம்மு-காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவதை ஊக்குவித்து வருகிறது. அப்படி இந்தியாவுக்கள் நுழையும் பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் ஜம்மு-காஷ்மீர் போலீசார் உடன் இணைந்து வேட்டையாடி வருகின்றனர்.

எல்லை வழியாக தற்போது ஆயுதங்கள் கடத்துவது மிகவும் எளிதான காரியம் இல்லை. இதனால் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் ஆயுதங்களை சப்ளை செய்ய முடிவு செய்துள்ளது. நேற்றிரவு ஜம்மு-காஷ்மீர் எல்லையில் உள்ள ஆக்னூர் என்ற கிராமத்தில் ட்ரோன் ஒன்று ஆயுதங்களை வீசியுள்ளனது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ஏ.கே.47, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் ஆயுதங்கள் கிடக்கிறதா எனத் தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News