செய்திகள்
மகாராஷ்டிராவில் சோகம் - கெமிக்கல் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலி
மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் நந்தோலியா ஆர்கானிக் கெமிக்கல்ஸ் ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர் என பால்கர் கலெக்டர் கைலாஷ் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
ஆர்கானிக் கெமிக்கல்ஸ் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.