செய்திகள்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
நீதிபதிகள் செயல்பாட்டை சமூக வலைதளத்தில் விமர்சித்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி உச்சநீதிமன்தற்தை அவமதிக்கும் வகையில் டுவீட் ஒன்று பதிவிட்டிருந்தார். அதன்பின் தமைமை நீதிபதி எஸ்.எ. பாப்தே பா.ஜனதா தலைவருடன் இணைந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தது தொடர்பாக ஜூலை 22-ந்தேதி டுவீட் ஒன்று பதிவிட்டிருந்தார்.
இதனால் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர்ந்தது. இன்று அந்த வழக்கு மீதான தீர்ப்பை அருண் மிஷ்ரா தலைமையிலான பி.ஆர். கவாய், கிருண்ஷ முரளி கொண்ட அமர்வு வழங்கியது.
அப்போது பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று அறிவித்தது. மேலும், ஆகஸ்ட் 20-ந்தேதி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு எதிராக பிரசந்த பூஷண் தனது கருத்தை பதிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.