செய்திகள்
கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேர் பலி: 64,553 பேருக்கு கொரோனா

Published On 2020-08-14 04:25 GMT   |   Update On 2020-08-14 04:25 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 1,007 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 64,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக 50 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. நேற்று 60 ஆயித்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 64,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மொத்த எண்ணிக்கை 24,61,191 ஆக உயர்ந்துள்ளது. 55,573 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 17,51,555 பேர் குணமடைந்துள்ளனர்.

2-வது முறையாக இன்று பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேர் உயிரிழந்ததால், இதுவரை 48,040 பேர் உயிரை கொரோனா பறித்துள்ளது.

இந்தியாவில் குணமடைந்தோர் சதவீதம் 70.77 ஆகவும், பலியானோர் சதவீதம் 1.96 ஆகவும், சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவீதம் 27.27 ஆகவும் உள்ளது.

நேற்று மட்டும் 8,48,728 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 2,76,94,416 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News