செய்திகள்
121 போலீஸ் அதிகாரிகளுக்கு உள்துறை மந்திரி பதக்கம்
நடப்பு ஆண்டுக்கான உள்துறை மந்திரி பதக்கம் 121 போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
புதுடெல்லி:
குற்ற புலன் விசாரணை தரத்தை மேம்படுத்தவும், விசாரணையில் திறம்பட செயல்படும் போலீஸ் அதிகாரிகளை அங்கீகரிக்கவும், ‘சீர்மிகு விசாரணைக்கான மத்திய உள்துறை மந்திரி பதக்கம்’ கடந்த 2018-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
நடப்பு ஆண்டுக்கான இந்த பதக்கத்துக்கு 121 போலீஸ் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சி.பி.ஐ.யை சேர்ந்த 15 பேரும், மத்திய பிரதேச போலீஸ், மராட்டிய மாநில போலீஸ் ஆகியவற்றை சேர்ந்த தலா 10 பேரும், உத்தரபிரதேச போலீசை சேர்ந்த 8 பேரும், கேரளா, மேற்கு வங்காள மாநில காவல்துறைகளை சேர்ந்த தலா 7 பேரும் அடங்குவர். 121 போலீஸ் அதிகாரிகளில் 21 பேர் பெண்கள் ஆவர்.
குற்ற புலன் விசாரணை தரத்தை மேம்படுத்தவும், விசாரணையில் திறம்பட செயல்படும் போலீஸ் அதிகாரிகளை அங்கீகரிக்கவும், ‘சீர்மிகு விசாரணைக்கான மத்திய உள்துறை மந்திரி பதக்கம்’ கடந்த 2018-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
நடப்பு ஆண்டுக்கான இந்த பதக்கத்துக்கு 121 போலீஸ் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சி.பி.ஐ.யை சேர்ந்த 15 பேரும், மத்திய பிரதேச போலீஸ், மராட்டிய மாநில போலீஸ் ஆகியவற்றை சேர்ந்த தலா 10 பேரும், உத்தரபிரதேச போலீசை சேர்ந்த 8 பேரும், கேரளா, மேற்கு வங்காள மாநில காவல்துறைகளை சேர்ந்த தலா 7 பேரும் அடங்குவர். 121 போலீஸ் அதிகாரிகளில் 21 பேர் பெண்கள் ஆவர்.