செய்திகள்
ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மகள் உடல்கள்

மகள் மீதான பாசத்தால் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை- தந்தை இறந்த சோகத்தில் மகள்களும் உயிரிழந்த சோகம்

Published On 2020-08-08 13:47 GMT   |   Update On 2020-08-08 13:47 GMT
மகளுக்கு நேர்ந்த துயரத்தை கண்டு பொறுக்காத தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில் மகள்களும் ரெயில் முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா:

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரை சேர்ந்தவர் பாபு ரெட்டி. எலக்ட்ரிகல் காண்ட்ராக்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2 மகள்கள். இதில் மூத்த மகள் ஸ்வேதாவுக்கு திருமணமான நிலையில் அவரது கணவர் சுரேஷ்குமார், தினமும் அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மகளுக்கு நேர்ந்த கொடுமையால் மன உளைச்சலில் இருந்த பாபு ரெட்டி, தன் மரணத்துக்கு காரணம் மருமகன் சுரேஷ்குமார் தான் என கூறி வீடியோ பதிவிட்ட பின் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தந்தையின் மரணத்தை அறிந்த பாச மகள்களும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். ஒரே குடும்பத்தில் 3 பேரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருமகன் சுரேஷ்குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News