செய்திகள்
ஏர் இந்தியா விமானம் விபத்து

கேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்து: 191 பேர் கதி என்ன?

Published On 2020-08-07 15:28 GMT   |   Update On 2020-08-07 16:08 GMT
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது.
துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-344 விமானம் வந்தது.

அந்த விமானம் தரையிறங்கும்போது ஒடுதளத்தில் சறுக்கி விபத்திற்குள்ளானது. இதனால் அருகில் உள்ள 30 அடி பள்ளத்திற்குள் விமானம் சென்றது. அந்த விமானத்தில் 191 பேர்  பயணம் செய்துள்ளனர். பயணம் செய்தவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றதா? என்பது குறித்து முழு விவரம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
Tags:    

Similar News