செய்திகள்
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்

கேரளாவின் இடுக்கி, மலப்புரம், வயநாடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை மையம்

Published On 2020-08-07 06:54 GMT   |   Update On 2020-08-07 06:54 GMT
கேரளாவின் இடுக்கி, மலப்புரம், வயநாடு பகுதிகளுக்கு ஆகஸ்டு 11-ம் தேதி வரை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

தென்மேற்கு பருவமழை பருவமழை காரணமாக கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது வயநாடு, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில், கேரளாவில் உள்ள இடுக்கி, மலப்புரம், வயநாடு ஆகிய பகுதிகளுக்கு ஆகஸ்டு 11-ம் தேதி வரை இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து இந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News