செய்திகள்
காஷ்மீர் ஐஜி விஜய்குமார்

ஸ்ரீநகரை சேர்ந்த யாரும் பயங்கரவாதிகள் பட்டியலில் இல்லை - காஷ்மீர் ஐஜி விஜய்குமார் தகவல்

Published On 2020-07-26 15:23 GMT   |   Update On 2020-07-26 15:23 GMT
ஸ்ரீநகரை சேர்ந்த பயங்கரவாதி நேற்று என்கவுண்டரில் கொல்லப்பட்டதையடுத்து மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாரும் பயங்கரவாதிகள் பட்டியலில் இல்லை என ஐஜி விஜய்குமார் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கை பயன்படுத்தி பல இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருகின்றனர். இந்த முயற்சிகளை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். 

குறிப்பாக ஊரடங்கு தொடங்கியது முதல் பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். இந்த என்கவுண்டர்களில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ஸ்ரீநகர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டான்.

கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒருவனான இஷ்ப்ஃயூ ரஷீத் ஸ்ரீநகர் மாவட்டத்தை சேர்ந்தவன் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இவன் தான் இம்மாவட்டத்தை சேர்ந்த கடைசி பயங்கரவாதி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரஷீத் கொல்லப்பட்டதையடுத்து ஸ்ரீநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாரும் தற்போது பயங்கரவாதிகள் பட்டியலிலோ அல்லது பயங்கரவாதிகள் அமைப்புடன் தொடர்பிலோ இல்லை என காஷ்மீர் போலீசார் தரப்பில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காஷ்மீர் ஐ.ஜி. விஜய்குமார் கூறியதாவது,’ பயங்கரவாதி இஷ்ப்ஃயூ ரஷீத் நேற்று என்கவுண்டரில் கொல்லப்பட்டான். இதனால் ஸ்ரீநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாரும் தற்போது பயங்கரவாதிகள் பட்டியலிலோ, பயங்கரவாதிகள் அமைப்புடன் தொடர்பிலோ இல்லை’ என்றார்.

Tags:    

Similar News