செய்திகள்
போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங்

கார்கில் வெற்றி தினம்- போர் நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை

Published On 2020-07-26 04:06 GMT   |   Update On 2020-07-26 04:06 GMT
கார்கில் வெற்றி தினத்தையொட்டி, போர் நினைவுச்சின்னத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி மற்றும் முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினர்.
புதுடெல்லி:

கார்கில் போரில் இந்தியா வெற்றி வாகை சூடியதை கொண்டாடும் வகையிலும், போரில் வீரமரணமடைந்த ராணுவ வீர்ர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  அவ்வகையில் இன்று 21வது கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இதையொட்டி, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் மற்றும் முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினார். 

கார்கில் வீரர்களின் தியாகத்தை பல்வேறு தலைவர்கள் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News