செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை (பழைய படம்)

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது

Published On 2020-07-14 04:24 GMT   |   Update On 2020-07-14 04:24 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,498 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்து 9,06,752 ஆக உள்ளது.

5,71,460 பேர் குணமடைந்துள்ள நிலையில் 3,11,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 23,727 பேர் (கடந்த 24 மணி நேரத்தில் 553 பேர்) உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரவில் 2,60,924 பேரும், தமிழகத்தில் 1,42,798 பேரும், டெல்லியில் 1,13,740 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 13-ந்தேதி வரை 1,20,92,503 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும், நேற்று மட்டும் 2,86,247 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News