செய்திகள்
என்எல்சி வெடி விபத்து

நெய்வேலி என்எல்சி வெடிவிபத்து: ரூ.5 கோடி அபராதம் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Published On 2020-07-09 12:29 GMT   |   Update On 2020-07-09 12:29 GMT
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக என்எல்சி-க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர்:

நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த ஜூலை 1-ந்தேதி பாய்லர்  வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 6 தொழிலாளர்கள சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 6 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு தொழிலாளி இன்று உயிரிழந்தார். இதனால் என்எல்சி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 2 பேர் இளநிலை பொறியாளர்கள்,  9 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள், 2 பேர் நிரந்தர தொழிலாளர்கள் ஆவர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர்  வெடித்த விபத்து தொடர்பாக  என்.எல்.சி-க்கு இடைக்கால அபராதத் தொகையாக ரூ. 5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்எல்சி நிர்வாகம் 30 லட்ச ரூபாய் பணமும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் கொடுப்பதாக உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News