செய்திகள்
நிர்மலா சீதாராமன், கல்யாண் பானர்ஜி

விஷப்பாம்பு கடித்து உயிரிழப்பதுபோல், நிர்மலா சீதாராமனால் மக்கள் உயிரிழக்கின்றனர்: டிஎம்சி தலைவர்

Published On 2020-07-05 08:34 GMT   |   Update On 2020-07-05 08:34 GMT
விஷப்பாம்பு கடித்து உயிரிழப்பதுபோல், மத்திய நிதியமைச்சரால் மக்கள் உயிரிழக்கின்றனர் என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் கல்யாண் பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களில் ஒருவர் கல்யாண் பானர்ஜி. இவர் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது ‘‘விஷப்பாம்பு கடித்து மக்கள் உயிரிழப்பதுபோல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் மக்கள் உயிரிழக்கின்றனர்.

அவர் பொருளாராரத்தை சிதைத்து விட்டார். இதனால் அவர் அவமானப்பட வேண்டும். அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் மிகவும் மோசமான நிதியமைச்சர்’’ என்றார்.

சில நாட்களுக்கு முன் மெய்நிகர் பிரசாரத்தின்போது மேற்கு வங்காள அரசை நிர்மலா சீதாராமன் குறை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News