செய்திகள்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் நீட்டிப்பு
2019 - 20 ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி, உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோர், வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, 2019 -20 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் தற்போது நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கால நீட்டிப்பு வழங்கப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.