செய்திகள்
மும்பை தாராவி

தாராவியில் மேலும் 19 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2300ஐ தாண்டியது

Published On 2020-07-02 17:29 GMT   |   Update On 2020-07-02 17:29 GMT
மும்பை தாராவி குடிசைப்பகுதியில் இன்று மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை:

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் தொடக்கத்தில் அதிகரித்து காணப்பட்ட கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது.

இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் இன்று 19 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,301 ஆக உள்ளது. அங்கு 84 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 
Tags:    

Similar News