செய்திகள்
கோப்பு படம்

மகாராஷ்டிராவில் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

Published On 2020-06-29 10:59 GMT   |   Update On 2020-06-29 11:11 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மும்பை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாட்டிலேயே அம்மாநிலத்தில் தான் வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், அம்மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் (ஜூன் 30) முடிவுக்கு வர உள்ளது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் ஊரடங்கை ஜூலை 31 வரை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களும் ஊரடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழகத்தில் ஊரடங்கு குறித்து இன்று முடிவு அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




Tags:    

Similar News