செய்திகள்
முதல் மந்திரி பினராயி விஜயன்

கேரளாவில் அதிகபட்சமாக மேலும் 152 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-06-24 13:12 GMT   |   Update On 2020-06-24 13:12 GMT
கேரளாவில் இன்று மேலும் 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் இன்று மேலும் அதிகபட்சமாக 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 152 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 144 பேர் உள்பட 152 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3603 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கேரளத்தில் 1,691 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News