செய்திகள்
தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள ராணுவம்

புல்வாமா என்கவுண்டர்- 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை

Published On 2020-06-23 03:29 GMT   |   Update On 2020-06-23 03:29 GMT
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு:

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பந்த்ஜு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
 
அப்போது பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. பாதுகாப்பு படை தரப்பில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் பலியானார். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
Tags:    

Similar News