செய்திகள்
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி

இந்தியா- வங்காளதேச எல்லையில் நிலநடுக்கம்

Published On 2020-06-03 03:58 GMT   |   Update On 2020-06-03 03:58 GMT
இந்தியா- வங்காளதேச எல்லையில் இன்று 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
புதுடெல்லி:

இந்தியா- வங்காளதேச எல்லையை ஒட்டியுள்ள இந்திய பகுதியில் இன்று காலை 7.10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகாக பதிவாகியிருந்தததாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
Tags:    

Similar News