செய்திகள்
கொரோனா வைரஸ்

நாளை முழு முடக்கம் கிடையாது: கர்நாடகா முதல் மந்திரி அலுவலகம்

Published On 2020-05-30 13:21 GMT   |   Update On 2020-05-30 13:35 GMT
ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு முடக்கம் கடைபிடித்து வரும் நிலையில், நாளை அவ்வாறு கடைபிடிக்கப்படாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நாளை வரை அமலில் உள்ளது. ஆனால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருக்கும். மக்கள் வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நாளை மக்கள் நலன் கருதி முழு ஊரடங்கு இல்லை என்று கர்நாடக முதல்-மந்திரி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் கொரோனா வைரஸுக்கு 2,781 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையல், 48 பேர் உயிரிழந்துள்ளனர். 894 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News