செய்திகள்
கோப்பு படம்

எல்லைக்குள் நுழைய முயன்ற சீன படை: மோதலில் ஈடுபட்ட இந்திய படையினர் - பரபரப்பு

Published On 2020-05-10 07:49 GMT   |   Update On 2020-05-10 07:49 GMT
சிக்கிம் மாநிலத்தில் இந்திய-சீன படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
காங்டாக்:

சிக்கிம் மாநிலம் நாகு லா பகுதியில் அமைந்துள்ள எல்லையில் நேற்று வழக்கம்போல இந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு ரோந்து பணிக்காக வந்த சீன படையினர் இது தங்கள் நாட்டிற்கு சொந்தமான பகுதி என கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்திய-சீன பாதுகாப்பு படையினர் மாறிமாறி கற்களை வீசி தாக்கிகொண்டனர். மேலும், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டு சண்டையில் ஈடுபட்டனர். 

இந்த சண்டையில் 150 பேர் ஈடுபட்டதாகவும்  அதில் 4 இந்திய வீரர்களும், 7 சீன வீரர்களும் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதனால் உடனடியாக இந்திய படைகளும், சீன படைகளும் அங்கு விரைந்து சென்றது. ஆகையால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 



இதையடுத்து, இரு நாடுகளின் ராணுவத்தை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு இரு தரப்பினரும் அமைதியான முறையில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள சமரசம் செய்யப்பட்டது. இதனால் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன படையினர் பின்வாங்கினர். 

இந்திய-சீன படையினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டதால் எல்லையில் பரபரப்பான சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News