செய்திகள்
தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரர்கள் (கோப்பு படம்)

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2020-04-04 10:10 GMT   |   Update On 2020-04-04 10:10 GMT
ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹார்ட்மண்ட் குரி கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் இன்று பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.

பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினர் தேடிக் கண்டுபிடித்து சுற்றி வளைத்தபோது பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதிலடி தந்தனர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் சில பயங்கரவாதிகள் அங்கு பதுங்கியிருப்பதால் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.
Tags:    

Similar News