செய்திகள்
டுவிட்டர் கணக்கை சாதனை பெண்களிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, தனது டுவிட்டர் கணக்கை சாதனை பெண்களிடம் ஒப்படைத்தார்.
புதுடெல்லி:
சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிர் தினத்துக்கு வாழ்த்து கூறி தனது சமூக வலைதள கணக்கை பெண் சாதனையாளர்களிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளிட்டுள்ள செய்தியில், மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று எனது சமூக வலைதளங்களை பெண்கள் நிர்வகிப்பர். மேலும் 7 பெண் சாதனையாளர்கள் தங்கள் வாழ்க்கை பயணத்தை டுவிட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் என பதிவிட்டுள்ளார்.