செய்திகள்
விபத்துக்குள்ளான கார்

பஞ்சாப்: கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி

Published On 2020-02-28 21:28 GMT   |   Update On 2020-02-28 21:28 GMT
பஞ்சாப் மாநிலத்தில் நேற்று கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலம் ஹோஷியர்பூர் மாவட்டத்தில் உள்ள சாலையில் நேற்று கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணம் செய்தனர்.

டண்ட்வாலா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையின் மறுபுறம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று கார் மீது வேகமாக வந்து மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக உள்ள லாரி டிரைவரை தீவிரமாக தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News