செய்திகள்
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே டெல்லி வந்தடைந்தார்
4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று மாலை டெல்லி வந்தடைந்தார்.
புதுடெல்லி:
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 4 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் அவர் 11-ம் தேதி இலங்கை புறப்பட்டுச் செல்கிறார்.
இந்நிலையில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று மாலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். மத்திய மந்திரி சஞ்சய் டோத்ரே அவரை கைகுலுக்கி வரவேற்றார். அவ்ருடன் தூதரக அதிகாரிகளும் வந்திருந்தனர்.
இந்த பயணத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசும் அவர், இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மேலும், வாரணாசி, சாரநாத், புத்த கயா மற்றும் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் வகையில் அவரது பயணம் திட்டமிடப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு இலங்கை பிரதமராக பதவியேற்றபின் மகிந்த ராஜபக்சே இந்தியா வந்துள்ளது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.