செய்திகள்
இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் தகவல்

Published On 2020-01-01 07:50 GMT   |   Update On 2020-01-01 07:50 GMT
சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் இது லேண்டர் மற்றும் ரோவர் மாடலில் இருக்கும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கிவிட்டது.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். அதற்காக 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும். அதற்காக 6 ஆய்வு மையம் உருவாக்கப்படும்.


சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. இது லேண்டர் மற்றும் ரோவர் மாடலில் இருக்கும்.

சந்திரயான்-2 திட்டத்தில் லேண்டர் வேகமாக சென்று நிலவில் மோதியதால் வெற்றிகரமாக தரை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஆனாலும் ‘ஆர்பிட்டர்’ செயல்பட்டு வருகிறது. அது இன்னும் 7 ஆண்டுகளுக்கு தகவல்களை அனுப்பும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News