செய்திகள்
தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் காட்சி.

டெல்லியில் அடுக்குமாடியில் தீ விபத்து- 40 பேர் மீட்பு

Published On 2019-12-26 05:56 GMT   |   Update On 2019-12-26 05:56 GMT
டெல்லி கிருஷ்ணா நகரில் உள்ள 4 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
புதுடெல்லி:

டெல்லி கிருஷ்ணா நகரில் உள்ள 4 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அந்த குடியிருப்பில் தரை தளத்தில் இருந்த பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ வீடுகளுக்கும் பரவியது. உடனடியாக வீடுகளில் இருந்தவர்கள் 4-வது மாடியின் மேலே சென்று மொட்டை மாடியில் நின்று உதவி கோரி கூச்சலிட்டனர்.

தகவல் அறிந்ததும் 5 தீயணைப்பு வண்டிகளில் போலீசார் சென்று தீயை அணைத்தனர். இதற்கிடையே நவீன ஏணிகள் மூலம் மொட்டை மாடியில் இருந்த 40 பேரும் மீட்கப்பட்டனர்.
Tags:    

Similar News