செய்திகள்
சோனியாவுடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு - பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு
ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரியாக வரும் 29-ம் தேதி பொறுப்பேற்கவுள்ள ஹேமந்த் சோரன், சோனியா காந்தியை சந்தித்து தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
புதுடெல்லி:
81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
அம்மாநில கவர்னர் திரவுபதி முர்முவை நேற்று சந்தித்து 50 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆட்சி அமைக்க வருமாறு அவருக்கு கவர்னர் இன்று அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், வரும் 29-ம் தேதி முதல் மந்திரியாக பதவி ஏற்கும் ஹேமந்த் சோரன் விமானம் மூலம் இன்றிரவு டெல்லி வந்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்த ஹேமந்த் சோரன், தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான ஹேமந்த் சோரன் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
அம்மாநில கவர்னர் திரவுபதி முர்முவை நேற்று சந்தித்து 50 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆட்சி அமைக்க வருமாறு அவருக்கு கவர்னர் இன்று அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், வரும் 29-ம் தேதி முதல் மந்திரியாக பதவி ஏற்கும் ஹேமந்த் சோரன் விமானம் மூலம் இன்றிரவு டெல்லி வந்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்த ஹேமந்த் சோரன், தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.