செய்திகள்
ஒடிசாவில் இளம்பெண் கற்பழிப்பு- கணவரின் நண்பர் வெறிச்செயல்
ஒடிசா மாநிலத்தில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக அவரது கணவரின் நண்பர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலம் கலாகந்தி மாவட்டம் பவானி பட்னா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்.
சம்பவத்தன்று அந்த பெண்ணை அவரது கணவரின் நண்பர் உள்பட 3 பேர் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர்.
3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை ஒரு இடத்தில் வைத்து கற்பழித்து உள்ளனர். இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். அதோடு பெண்ணின் ஏ.டி.எம். கார்டையும் பறித்து சென்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் 3 பேர் தன்னை கற்பழித்தது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அந்த பெண்ணிடம் வாக்கு மூலம் பெற்று அவரது கணவரின் நண்பர் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் பெண்ணிடம் இருந்து அபகரித்து சென்ற ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
ஒடிசா மாநிலம் கலாகந்தி மாவட்டம் பவானி பட்னா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்.
சம்பவத்தன்று அந்த பெண்ணை அவரது கணவரின் நண்பர் உள்பட 3 பேர் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர்.
3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை ஒரு இடத்தில் வைத்து கற்பழித்து உள்ளனர். இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். அதோடு பெண்ணின் ஏ.டி.எம். கார்டையும் பறித்து சென்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் 3 பேர் தன்னை கற்பழித்தது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அந்த பெண்ணிடம் வாக்கு மூலம் பெற்று அவரது கணவரின் நண்பர் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் பெண்ணிடம் இருந்து அபகரித்து சென்ற ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.