செய்திகள்
கோப்புப்படம்

ஒடிசாவில் இளம்பெண் கற்பழிப்பு- கணவரின் நண்பர் வெறிச்செயல்

Published On 2019-12-16 07:59 GMT   |   Update On 2019-12-16 07:59 GMT
ஒடிசா மாநிலத்தில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக அவரது கணவரின் நண்பர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலம் கலாகந்தி மாவட்டம் பவானி பட்னா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்.

சம்பவத்தன்று அந்த பெண்ணை அவரது கணவரின் நண்பர் உள்பட 3 பேர் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர்.

3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை ஒரு இடத்தில் வைத்து கற்பழித்து உள்ளனர். இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். அதோடு பெண்ணின் ஏ.டி.எம். கார்டையும் பறித்து சென்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் 3 பேர் தன்னை கற்பழித்தது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அந்த பெண்ணிடம் வாக்கு மூலம் பெற்று அவரது கணவரின் நண்பர் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் பெண்ணிடம் இருந்து அபகரித்து சென்ற ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
Tags:    

Similar News