செய்திகள்
வீட்டிற்குள் படுத்திருந்த சிறுத்தை

நாயை துரத்தும்போது வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட சிறுத்தை

Published On 2019-11-26 06:54 GMT   |   Update On 2019-11-26 06:54 GMT
மகாராஷ்டிராவில் நாயை துரத்திக்கொண்டு வந்த சிறுத்தை குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஒரு வீட்டிற்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டம் பிம்பல்கன் ரோடா கிராமத்தைச் சேர்ந்தவர் திலீப். கடந்த சனிக்கிழமை இரவு இவரது வீட்டிற்குள் சிறுத்தை புகுந்தது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, அலறியடித்து வெளியே ஓடினர்.

திலீப்பின் வளர்ப்பு நாயை துரத்திக் கொண்டு வந்த சிறுத்தை அவரது வீட்டிற்குள் புகுந்துள்ளது. நாய் பின்பக்க கதவு வழியாக வெளியே ஓடிவிட்டது. ஆனால் சிறுத்தை வெளியேற தெரியாமல் உள்ளேயே படுத்துக்கொண்டது.  இதையடுத்து திலீப் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். 4 வயதான அந்த சிறுத்தை பின்னர் வனப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டு விடப்பட்டது.

Tags:    

Similar News