செய்திகள்
ஏரிக்குள் கவிழ்ந்த கார்

சத்தீஸ்கர்: ஏரிக்குள் கார் கவிழ்ந்து விபத்து - 8 பேர் பலி

Published On 2019-11-21 17:32 GMT   |   Update On 2019-11-21 17:32 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் கார் ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பயணித்த 8 பேர் உயிரிழந்தனர்.
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் பிமிட்ரா மாவட்டத்தில் உள்ள சாலையில் இன்று இரவு ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் 3 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் ஒரு வயது குழந்தை உள்பட 8 பேர் பயணித்துக்கொண்டிருந்தனர்.

மோகப்ஹடா பகுதியை கடந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் அருகே இருந்த ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

தகவலறிந்து விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஏரிக்குள் மூழ்கிய காரில் சிக்கியிருந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மீட்கப்பட்டவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 8 பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருவதாக தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News