செய்திகள்
பொருளாதார மந்தநிலை: மத்திய அரசை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலையை கண்டித்து வரும் 30-ம் தேதி டெல்லி ராம்லீலா திடலில் மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
புதுடெல்லி:
இந்நிலையில், நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலைக்கு காரணமான மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து வரும் 30-ம் தேதி டெல்லி ராம்லீலா திடலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் பல மாநிலங்களை சேர்ந்த சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், மாநில தலைவர்களுடனான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.