search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருளாதார மந்தநிலை"

    • சிட்டி குரூப்பில் உலகெங்கும் 2,39,000 பேர் பணியாற்றுகிறார்கள்
    • காலாண்டு அறிக்கையில் $1.8 பில்லியன் நஷ்டத்தை சிட்டி அறிவித்தது

    அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக கொண்டு உலகெங்கும் பல கிளைகளுடன் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிதி முதலீடு மற்றும் நிதி சேவைகளுக்கான நிறுவனம், சிட்டி குரூப் (Citigroup).

    இந்நிறுவனத்தில் உலகெங்கும் 2,39,000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.

    இதன் காலாண்டு நிதி அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் அந்நிறுவனம் சுமார் $1.8 பில்லியன் தொகை நஷ்டத்தை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் சிட்டி குரூப், வரும் இரண்டாண்டுகளில் தனது பணியாளர்களில் 20 ஆயிரம் பேரை (10 சதவீதம் பேர்) பணிநீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது.

    சிட்டி குரூப்பின் தலைமை செயல் அதிகாரி (CEO) ஜேன் ஃப்ரேசர் (Jane Fraser), "2024 முக்கிய ஆண்டாக இருக்கும். நிறுவனத்தில் பல சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    "பணிநீக்க நடவடிக்கை ஒரு கடினமான செயல்தான். ஆனாலும், 2026 இறுதியில் 1,80,000 பேர் மட்டுமே பணியாற்றும் நிறுவனமாக சிட்டி குரூப் மாற்றப்படும்" என இதன் தலைமை நிதி அதிகாரி (CFO) மார்க் மேசன் (Mark Mason) தெரிவித்தார்.

    வங்கி துறையில் அமெரிக்காவின் பெரும் வங்கிகளில் முதல் 5 இடங்களில் உள்ளது சிட்டி.

    அமெரிக்க பங்கு சந்தையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதன் பங்குகள் 1.4 சதவீத சரிவை சந்தித்தன.

    உலகளாவிய பொருளாதார மந்தநிலை நீடித்தாலோ, மேலும் நலிவுற்றாலோ இத்தகைய பணிநீக்கங்கள் பல துறைகளில் கடுமையாக அதிகரிக்கும் என மனிதவள நிபுணர்கள் எச்சரிப்பதால் தனியார் வங்கி துறையில் வேலை செய்பவர்கள் கவலையில் இருக்கின்றனர்.

    • உலகளவில் மக்களிடம் "வாங்கும் சக்தி" குறைந்து விட்டது
    • கடந்த ஆண்டே கூகுள் மற்றும் அமேசான் பல ஊழியர்களை நீக்கின

    கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

    உலகளவில் பெரும்பான்மையான மக்களிடம் "வாங்கும் சக்தி" (purchase power) குறைந்ததால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவைகள் குறைந்துள்ளது. நிறுவனங்களின் விற்பனையில் தேக்க நிலையையும், வீழ்ச்சியும் அதிகரித்து வருகின்றன.

    2022 மார்ச்சில் தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர் மற்றும் 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், அமெரிக்க-சீன வர்த்தக உறவில் நீடிக்கும் சிக்கல், சீனாவில் சரிய தொடங்கியுள்ள உள்நாட்டு பொருளாதாரம், நிலையற்ற கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல காரணங்கள் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

    கடந்த வருடம் முதல் இதன் தாக்கம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் காலாண்டு அறிக்கையிலும் எதிரொலிக்க தொடங்கியதால், உலகின் பல முன்னணி தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் நஷ்டத்தை குறைக்க ஆட்குறைப்பை தொடங்கின.

    "லே ஆஃப்" (layoffs) அல்லது ஜாப் கட்ஸ் (job cuts) என அழைக்கப்படும் இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக கடந்த ஆண்டே அமேசான், மைக்ரோசாப்ட், காக்னிசன்ட் மற்றும் கூகுள் உட்பட பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்தன.

    தற்போது அடுத்த சுற்றில் மேலும் பல ஊழியர்களை அமேசான் மற்றும் கூகுள் நீக்கியுள்ளது.

    அமேசான், முன்னரே ட்விட்ச் லைவ்ஸ்ட்ரீமிங் யூனிட்டில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. தற்போது ப்ரைம் வீடியோஸ் (Prime Videos) மற்றும் எம்ஜிஎம் ஸ்டூடியோ (MGM Studios) கிளைகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்களை நீக்கியது.

    கூகுள், செலவினங்களை கட்டுப்படுத்த டிஜிட்டல் அசிஸ்டன்ட், ஏஆர் (ஆக்மென்டட் ரியாலிட்டி), மற்றும் பொறியியல் துறைகளில் பணியாற்றியவர்களை நீக்கியது.

    பொருளாதார மந்தநிலை நீடித்தாலோ, மேலும் நலிவுற்றாலோ இத்தகைய பணிநீக்கங்கள் கடுமையாக அதிகரிக்கும் என மனிதவள நிபுணர்கள் எச்சரிப்பதால் மென்பொருள் துறையில் வேலை செய்பவர்கள் கவலையில் இருக்கின்றனர்.

    ×