என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாபா வாங்கா"

    • பால்கெரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
    • பணம் மற்றும் டிஜிட்டல் நாணயங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடையும்.

    2025 ஆம் ஆண்டு உலகம் பல இயற்கை பேரிடர்கள், விபத்துகள், வர்த்தக போட்டிகள், போர்களால் நிறைந்துள்ளது. 2025 முடிவடைய இன்னும் இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், 2026-ல் நிலைமை மேம்படும் என்று பலர் நம்புகிறார்கள்.

    ஆனால், பால்கெரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளன.

    பாபா வாங்கா சொன்ன பல விஷயங்கள் நிஜமாகியிருப்பதாகக் கூறப்படும் நிலையில் 2026 குறித்த அவரின் கணிப்பு விவாதப்போருளாகி வருகிறது.

    பாபா வாங்கா கணிப்புப்படி, 2026 ஆம் ஆண்டு நடப்பு ஆண்டை விட மிகவும் மோசமாக இருக்கலாம்.

    உலகப் பொருளாதாரம் சரிவடையும் அபாயம் உள்ளது. சர்வதேச சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதார மந்தநிலை ஏற்படும்.

    பணம் மற்றும் டிஜிட்டல் நாணயங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடையும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு இந்த நிலைமை மேலும் கடினமானதாக மாறலாம்.

    இதன் உச்சமாக 2026-ல் உலக நாடுகளுக்கு இடையே ஒரு போர் நடக்கும் என்று பாபா வாங்கா எச்சரித்துள்ளார். அவர் கூறிய இந்தப் போரே மூன்றாம் உலகப் போராக மாறக்கூடும் என்று பலர் அஞ்சுகின்றனர். 

    • டயானாவின் மரணம், சீனாவின் வளர்ச்சி பற்றியும் முன்கூட்டியே கணித்தவர்.
    • 2033-ம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயரும்.

    பல்கேரிய ஆன்மீகவாதியான பாபா வாங்கா, 1911-ம் ஆண்டு பிறந்தார். கண் பார்வையற்ற இவர் எதிர்காலத்தை கணித்துச் சொல்வதில் மிகவும் பிரபலமானவர்.

    இவர் எதிர்காலத்தை பற்றி கூறிய பல தகவல்கள் அப்படியே அரங்கேறியுள்ளது.

    இவரது கணிப்புகள் பல நேரங்களில் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. இவரது ஆதரவாளர்கள் இவரை ஒரு தீர்க்கத்தரிசியாகவே நம்புகின்றனர்.

    பாபா வாங்கா 1996-ம் ஆண்டே இறந்துவிட்டாலும் இவர் எதிர்காலத்தை பற்றி கணித்து சொன்ன செய்திகள் இன்றும் மக்களிடையே பரவி வருகிறது. அவரது கருத்துகள் மற்றும் எதிர்கால கணிப்புகள் இன்றும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

    உதாரணமாக இவர் 1980 ஆண்டு ரஷ்யாவின் குர்ஸ்க் நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கும் என கணித்துச் சொன்னார். அதேபோல் 2000-ம் ஆண்டில் ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்சி 118 பேர் உயிரிழந்தனர்.

    1989 -ம் ஆண்டு எக்குப் பறைவகள் அமெரிக்காவை தாக்கும் என கணித்துச் சொன்னார். அதேபோல் 2001-ம் ஆண்டு இரட்டை கோபுரங்கள் விமானம் மூலம் தாக்கப்பட்டது. 1984-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தியின் படுகொலையை கூட கணித்துச் சொன்னார்.

    டயானாவின் மரணம், சீனாவின் வளர்ச்சி பற்றியும் முன்கூட்டியே கணித்தவர்.

    இப்படி எதிர்காலத்தைப் பற்றி அவர் கணித்துச் சொன்ன பல சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு முதல் 5079-ம் ஆண்டு வரை அவர் சொன்ன கணிப்புகள் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

    2025-ம் ஆண்டில் ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்க மோதல்களால் நிலையற்ற தன்மை ஏற்படும். உலகம் முழுக்க பூகம்பங்கள் மற்றும் வெள்ளம் உள்ளிட்ட ஏராளமான இயற்கை பேரழிவுகள் உலகை உலுக்கும். மனிதர்கள் வேற்று கிரகவாசிளுடன் தொடர்பு கொள்ளுவர் எனவும் அவர் கணித்து கூறியுள்ளார்.

    இதேபோல் 2028-ம் ஆண்டு மனிதர்கள் வீனசிற்கு செல்வார்கள்.

    2033-ம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயரும். 2046-ம் ஆண்டு செயற்கை உறுப்புகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும். 2066-ம் ஆண்டு அமெரிக்கா சுற்றுசூழலை அழிக்கும் ஆயுதத்தை கண்டுபிடிக்கும். 2084-ம் ஆண்டு இயற்கை தன்னை புதுப்பிக்க தொடங்கும்.

    2111-ம் ஆண்டு மனிதர்கள் எந்திரங்களாக மாறுவார்கள். 2154-ம் ஆண்டு விலங்குகள் மனிதர்களாக பரிணாமா வளர்ச்சி அடையும். 2170-ம் ஆண்டு பூமி வறண்டு பாலைவனமாகும். 2288-ம் ஆண்டு மனிதனுக்கும் வேற்று கிரகவாசிகளுடன் தொடர்புகள் வலுப்படும். 2341-ம் ஆண்டு விண்கல்லால் பூமிக்கு ஆபத்து வரும்.

    3805-ம் ஆண்டு போர்களால் மக்கள் தொகை சரியும். 3854-ம் ஆண்டு மனித குலம் மீண்டும் பழங்குடிமுறைக்கு திரும்பும்.

    இப்படியாக 5079-ம் ஆண்டுவரை அவர் பல்வேறு கணிப்புகளை கூறியுள்ளார்.

    தற்போது குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கான கணிப்புகள் மற்றும் வரவிருக்கும் கால கட்டத்தில் அவர்களின் வாழ்க்கையில் பணம் மற்றும் செல்வத்தின் அடிப்படையில் என்ன நடக்கும் பற்றி அவர் கணித்து கூறியுள்ளார்.

    மேஷ ராசி

    மேஷ ராசியை செவ்வாய் ஆட்சி செய்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்களின் தைரியமும் உறுதியும் அவர்களை விரும்பிய இலக்குகளை அடைய உதவும். நல்ல முதலீட்டு தேர்வுகளை செய்வது தொழில் மாற்றம் செய்வது மற்றும் புதிய தொழிலை தொடங்குவது ஆகியவை வரும் மாதங்களில் இவர்களுக்கு கணிசமான நிதி வளர்ச்சியை ஏற்படும்.

    ரிஷப ராசி

    சுக்ரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் நிலையாக இருப்பதால் நல்ல அதிர்ஷ்டத்தை ஈட்டுகிறார்கள். தற்போதைய நிதி நிலைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அவர்களின் ஆளும் கிரகம் எதிர்க்காலத்திற்கான விவேகமான முதலீடுகளை செய்ய அவர்களை தூண்டுகிறது. அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தங்கள் நற்பெயரை உயர்த்தி கொள்ளவும். தங்களின் கடின உழைப்பின் நன்மைகளை பெற வேண்டும். 2025-ம் ஆண்டு கடினமான காலத்திற்கு பிறகு உங்கள் ராசிக்கு புதிய நிலைத்தன்மை உணர்வை தருகிறது.

    மிதுனம் ராசி

    மிதுன ராசிக்காரர்களை புதன் கிரகம் ஆட்சி செய்கிறது. அவர்கள் எதிர்க்காலத்தை திட்டமிடுவதில் சிறந்து விளங்குகிறார்கள். வரவிருக்கும் மாதங்கள் இவர்களுக்கு பலன் அளிக்கும். எதிர்பாராத வாய்ப்புகள் மன தெளிவு நிறைந்ததாக இருக்கும். எதிர்ப்பாராத விதமாக வெற்றி கிடைக்கும்.

    சிம்ம ராசி

    சிம்ம ராசிக்காரர்களை சூரியன் ஆளும் கிரகமாக இருப்பதால் அவர்கள் வரும் மாதங்களில் நிறுவனத்தை தொடங்குவார்கள். பல நல்ல சாத்திய கூறுகளின் விளைவாக அவர்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் நீண்ட கால நிதி இலக்குகளை அடைய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

    இன்று உங்கள் இலக்கை நிர்ணயித்தால் விரைவில் அடுத்த சில மாதங்களுக்குள் தொழில் முறை சாதனை மற்றும் நிதி ஆதாயம் மூலம் நீங்கள் கோடீஸ்வரராக மாறிவீர்கள்.

    இவ்வாறு 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் பணக்கார வாழ்க்கை கிடைக்கும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.

    • ஜப்பானின் பாபா வங்கா என்ற பெண்ணின் தீர்க்க தரிசனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • கொரோனா தொற்று நோய் குறித்த இவரது கணிப்புகள் பரவலாக பேசப்பட்டது.

    எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து கூறும் தீர்க்க தரிசிகள் உலகில் பலர் உள்ளனர். அவர்களில் பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவும் ஒருவர்.

    இவர் போர்கள், அரசியல் மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் பற்றி கூறியது பலமுறை உண்மையாகி உள்ளது. இந்நிலையில் ஜப்பானின் பாபா வங்கா என அழைக்கப்படும் ரியோ டட்சுகி என்ற பெண்ணின் தீர்க்க தரிசனம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மங்கு கலை ஓவியரான ரியோ டட்சுகி தனது கனவுகளில் காணும் சம்பவங்களை வரைய தொடங்கினார். அவர் 1980 முதல் தெளிவான கனவுகளை வரைய தொடங்கிய நிலையில் இது அடுத்த சில ஆண்டுகளில் அவ்வாறே நடந்ததாக கூறப்படுகிறது. 1991-ம் ஆண்டு பிரெட்டி மெர்குரியின் மரணம், 1995-ம் ஆண்டு கோபே நிலநடுக்கம், 2011-ம் ஆண்டு ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி, 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று நோய் குறித்த இவரது கணிப்புகளை அவர் முன்கூட்டியே துல்லியமாக வரைந்திருந்ததாக கூறுகிறார்கள்.

    அதன்பிறகே அவர் முன்கூட்டியே கணிக்கும் வல்லமை பெற்றவராக அங்கீகரிக்கப்பட்டதோடு அவரது ஓவியங்கள் தொடர்ந்து ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் வரைந்த மிக மோசமான சுனாமி பற்றிய ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு இந்த ஆண்டு (2025)-ம் ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலுக்குள் ஏற்படும் பெரும் பிளவு காரணமாக மிக பயங்கரமான சுனாமி ஏற்படும் என ரியோ டட்சுகி கணித்துள்ளார்.

    இந்த சுனாமி 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை விட 3 மடங்கு பெரிதாக இருக்கும் எனவும் ஜப்பான் தெற்கு பகுதியில் கடல் கொந்தளிப்பது போல இருக்கும் என்பதோடு அப்பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என கணித்துள்ளார்.

    ரியோ டட்சுகியின் இந்த கணிப்பு காரணமாக ஜப்பானுக்கு சுற்றுலா செல்ல இருந்த பலர் தங்களது பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். இதனால் ஜப்பானுக்கான விமான முன்பதிவுகளில் 83 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ரியோ டட்சுகியின் கணிப்பு காரணமாக தங்கள் பயணங்களை ரத்து செய்துள்ளனர்.

    இதனால் இன்று மீண்டும் சுனாமி ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஜப்பானியர்கள் உள்ளிட்ட ஆசிய மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக ஜப்பானின் டொகாரோ தீவுகளில் ஜூலை 3ஆம் தேதி 5.5 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, பாபா வங்காவின் கணிப்பு உண்மையாகிவிடுமோ? என்ற அச்சம் நிலவுகிறது

    • உலகின் நடந்த பல்வேறு சம்பவங்கள் பாபா வாங்கா கணித்தது போலவே நடந்துள்ளது.
    • ஐரோப்பாவில் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்தும் பாபா வாங்கா எச்சரித்துள்ளார்.

    புதுடெல்லி:

    பல்கேரியாவை சேர்ந்தவர் மூதாட்டி பாபா வாங்கா. இவர் 1996-ம் ஆண்டு தனது 85 வயதில் இறந்து விட்டார். இவருக்கு 12 வயது இருக்கும்போதே பல்கேரியாவில் ஏற்பட்ட பெரும் புயல், வெள்ளத்தில் பாபாவாங்காவின் கண்களில் மின்னல் தாக்கி அவருக்கு பார்வை பறி போனது.

    அந்த நொடியில் அவருக்கு எதிர்கால காட்சிகள் மனதில் வருவதாக அவர் குறிப்பிட்டதோடு, எதிர்காலத்தில் எந்த வருடத்தில் என்ன நடக்கும் என்பது இவருக்கு தினமும் காட்சிகளாக வந்துள்ளது. அதை கணிப்புகளாக எழுதிய பாபா வாங்கா இந்த சக்தி தனக்கு கடவுள் கொடுத்தது என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் 5079-ம் ஆண்டு உலகம் அழியும் என்றும், அதுவரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்து விட்டு மரணமடைந்தார்.

    இந்நிலையில் உலகின் நடந்த பல்வேறு சம்பவங்கள் இவர் கணித்தது போலவே நடந்துள்ளது. உதாரணமாக அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் பேரழிவு, ஜப்பான் சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றது உள்பட பல்வேறு சம்பவங்களை இவர் துல்லியமாக கணித்து இருந்தாராம்.

    இந்நிலையில் 2024-ம் ஆண்டு கடுமையான வானிலை மாற்றங்கள் மற்றும் பேரழிவு ஏற்படலாம் என பாபா வாங்கா கணித்துள்ளார். சமீபத்தில் வெளியான அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில், உலகளாவிய வெப்ப அலைகள் 67 சதவீதம் அடிக்கடி நிகழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த வெப்ப அலைகளின் அதிகபட்ச வெப்பநிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதை விட அதிகரித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 2024-ல் கடும் வெப்ப அலைகளுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே அறிவியல் ஆய்வுகளில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவும் பாபா வாங்காவின் கணிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    1996-ம் ஆண்டு அவர் இறக்கும்போது இணைய சேவை ஆரம்ப நிலையில் இருந்தது. ஆனால் 2024-ம் ஆண்டு சைபர் தாக்குதல்கள் பெருமளவு நடைபெறும் என்பதை அவர் கணித்திருந்தார். இதுவும் அவரது குறிப்பிடத்தக்க கணிப்புகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 12 மாதங்களில் ஆப்பிள், நெட்டா மற்றும் எக்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் இணைய பாதுகாப்பு மீறல் பிரச்சனைகளை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    2024-ம் ஆண்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி, உலக பொருளாதார சக்தியின் மாற்றங்கள், அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பிரச்சனைகள் மற்றும் அதிகரித்து வரும் கடன் பிரச்சனைகள் ஆகியவற்றையும் பாபா வாங்கா முன்னரே கணித்து கூறியுள்ளார்.

    இந்த ஆண்டு லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் தொடர்ச்சியான பண வீக்கத்துடன் போராடி வருகின்றனர். மந்தமான உள்நாட்டு நுகர்வு காரணமாக 2023-ம் ஆண்டின் இறுதி காலாண்டில் ஜப்பான் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. சீனாவும் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இவை யாவும் பாபா வாங்காவின் கணிப்புகளை மெய்யாக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதே போல ஐரோப்பாவில் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்தும் பாபா வாங்கா எச்சரித்துள்ளார். அதோடு முக்கிய நாடு ஒன்று உயிரியல் ஆயுதங்களை சோதனை அல்லது தாக்குதலுக்கு பயன்படுத்தும் என்றும், 2024-ம் ஆண்டு தொடர்பாக பாபா வாங்கா கணித்துள்ளார். அவரது கணிப்பின்படி 5079-ம் ஆண்டில் உலகம் அழியும் என்று கூறப்படுவதால் அவரது கணிப்புகள் 5079-ல் நின்று விடும் என்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • 2025 ஆம் ஆண்டில் உலகின் முக்கிய சக்திகளுக்கு இடையே போர் ஏற்படும் என்று அவர் கணித்துள்ளார்.
    • பணவீக்கம், வர்த்தக பதட்டங்கள் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை அதிகரிக்கும்

    16 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஜோதிடரான நாஸ்ட்ராடாமஸ், வருங்காலம் குறித்த தனது கணிப்புகளுக்குப் பெயர் பெற்றவர். 2025 ஆம் ஆண்டில் உலகின் முக்கிய சக்திகளுக்கு இடையே போர் ஏற்படும் என்று அவர் கணித்துள்ளார்.

    அவரது எழுதி வைத்ததின்படி, இந்த மோதல் பரவலான அழிவுக்கு வழிவகுக்கும், இது உலகையே உலுக்கக்கூடும். நாஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, உலகம் ஒரு பொருளாதார சரிவைச் சந்திக்கும், அது பேரழிவை ஏற்படுத்தும், இது பரவலான அமைதியின்மை மற்றும் சமூக எழுச்சிக்கு வழிவகுக்கும். இந்த சரிவின் தாக்கம், மெக்சிகோ, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் மிகவும் கடுமையானதாக இருக்கலாம்.

     

    அங்கு பொருளாதார உறுதியற்ற தன்மை தற்போதுள்ள சவால்களை மேலும் மோசமாக்கும். பணவீக்கம், வர்த்தக பதட்டங்கள் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை அதிகரிக்கும் என்று கணித்துள்ளார்.

    நாஸ்டர்டாமஸ் போன்றே பல்கேரியாவை சேர்ந்த ஆன்மீகவாதி பாபா வாங்கா கணிப்புகளும் பெரும்பாலும் சரியாகவே இருந்துள்ளன.

     

    அவரது கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில், மனித குலம் வேற்று கிரகவாசிகளைச் சந்திக்கும், வேற்றுகிரகவாசிகள் ஒரு உலகளாவிய நிகழ்வில் [அது ஒரு விளையாட்டு நிகழ்வாக இருக்கலாம்] போது தங்களை வெளிக்காட்டுவார்கள்.

    மேலும் டெலிபதி மூலம் தொடர்பு கொள்ளும் திறனை மனிதர்கள் பெறுவார்கள், மனித பரிணாம வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்கப்ப் பாய்ச்சல் ஏற்படும் என்று கணித்துள்ளார்.  

    ×